அ.தி.மு.கவில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் ஜெ
சென்னை:
அ.தி.மு.க. செயற்குழுவில் புதிதாக 8 பெண்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த சில மாதங்களுக்கு முன் தான் மாவட்டச் செயலாளர்கள் அனைவரையும் மாற்றினார் ஜெயலலிதா.
தொகுதிவாரியாகவும் தொண்டர்களைச் சந்தித்தார். தொண்டர்களிடம் கெட்ட பெயர் வாங்கிய அனைத்துநிர்வாகிகளும் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.
இந் நிலையில் கட்சியின் தலைமை செயற்குழு, பொதுக்குழுக்களும் இப்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.இதில் செயற்குழுவில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. 8 பெண்கள் செயற்குழுவில்புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் விவரம்: தாம்பரம் லட்சுமி, திருவண்ணாமலை வனரோஜா, கடலூரர் ராமஜெயம், ஈரோடு செல்விமுருகேசன், பெரம்பலூர் ராஜேஸ்வரி, ராமநாதபுரம் செளந்தரவள்ளி, தூத்துக்குடி ராஜம்மாள், பர்கூர் சந்திராஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொதுக்குழுவுக்கு புதிதாக 22 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications