இன்டர்நெட்டில் தமிழ் பல்கலைக்கழகம்: அரசு திட்டம்
சென்னை:
உலகம் எங்கிலும் பரவியிருக்கும் தமிழ் மக்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் தமிழ்மொழியை கற்க துணைபுரியும் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் வரவிருக்கும்பொங்கலுக்கு (14.01.2001) முன்பாக துவங்கப்படும் என சென்னையில்வியாழக்கிழமையன்று நடந்த மாவட்டக் கலெக்டர்கள் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.
மாநாட்டில முதல்வர் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
கம்ப்யூட்டரை அரசுத்துறையில் முழுமையாக பயன்படுத்துவதன் மூலம்அரசுப்பணிகளின் தரம் உயரும். தகவல் தொழில் நுட்பத்திற்கென தனிக் கொள்கையைமுதன்முதலில் வகுத்த்து தமிழகம் தான்.
இந்திய மென்பொருள் பூங்கா, தமிழக தகவல் தொழில் நுட்பத்துக்கு உதவும் வகையில்அரசின் உதவியோடு மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் ஆகிய இடங்களில்செயற்கை கோள் தரை நிலையங்களை அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது.
ஏழை எளிய மக்களும் கம்ப்யூட்டர் கற்கும் வகையில் வோர்ல்டு டெல் நிறுவனத்துடன்இணைந்து மாநிலம் முழுவதும் 13 ஆயிரம் சமுதாய இணையங்கள அமைக்கப்ட்டஉள்ளன.
தமிழ்நெட் மாநாட்டின் பரிந்துரைகளின் படி தமிழ் கீ போர்டு, தமிழ் வரிவரிவடிகக்குறியீடுகள் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தமிழ் மென்பொருள்களின் வளர்ச்சி அதிகரித்துள்ளது.
தமிழ் நெட் மாநாட்டில் எடுக்கப்பட்ட மற்றொரு முடிவின்படி உலகம் முழுவதிலும்உள்ள தமிழர்களுக்கும், தமிழ் ஆர்வம் உள்ளவர்களும் தமிழ் கற்கும் வகையில் தமிழ்இணையப்பல்கலைக் கழகம் வரும் பொங்கல் திருநாளுக்கு முன் அமைக்கப்படும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.












Click it and Unblock the Notifications