மதுரை அருகே ரூ. 20 லட்சம் நகை கொள்ளை
மதுரை:
மதுரை அருகே ஒரு அடகுக் கடையிலிருந்து ரூ. 20 லட்சம் மதிப்புள்ள நகைகள்கொள்ளையடிக்கப்பட்டன.
இது பற்றி போலீஸார் கூறியதாவது:
மதுரை மாவட்டம் செக்கானூரணியைச் சேர்ந்தவர் குருசாமி நாடார். இவர்செக்கானூரணி - சோழவந்தான் சாலையில் குடும்பத்துடன் மாடி வீட்டில் வசித்துவருகிறார்.
மாடி வீட்டின் கீழ்ப் பகுதியில் ஒரு அடகுக் கடை, ஜவுளிக் கடை ஆகியவற்றை வைத்துநடத்தி வரும் அவர் குடும்பத்துடன் மாடியில் வசித்து வருகிறார். கீழ் தளத்தில் ஒருசமையலறையும் உண்டு.
அப்பகுதியில் பெரிய அடகுக்கடை இதுதான் என்பதால் சுற்றுப்புற பகுதிகளைச்சேர்ந்த மக்கள் அவசரத் தேவைக்காக தங்களிடமுள்ள நகைகளை குருசாமி நாடாரின்அடகுக் கடையில் வைத்து பணம் பெற்றுச் செல்வார்கள்.
அந்த வகையில் அவரிடம் நிறைய நகைகள் அடகு வைக்கப்பட்டன. அடகுவைக்கப்பட்ட நகைகளை அவர் அடகுக் கடையில் வைக்காமல் கீழ்த் தளசமையலறைக்குள் உள்ள பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்திருந்தார்.
இந் நிலையில், புதன்கிழமை இரவு அடகுக்கடை, ஜவுளிக் கடை இரண்டையும்மூடிவிட்டு அனைவரும் மேல்தளத்தில் உள்ள வீட்டில் தூங்கச் சென்றுவிட்டனர்.
நடுஇரவில் கீழ் தளத்தில் யாரோ கதவை உடைக்கும் சத்தம் கேட்டு குருசாமியும்அவரது குடும்பத்தினரும் கீழே இறங்கி வந்து பார்த்தனர். அப்போது சமையலறையின்கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பாதுகாப்புப் பெட்டகமும்உடைக்கப்பட்டிருந்தது.
அதில் வைக்கப்பட்டிருந்த 450 சவரன் தங்க நகைகள், ரூ. 70 ஆயிரம் ரொக்கம்ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின்மொத்த மதிப்பு ரூ. 20 லட்சமாகும்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு உயர் போலீஸ் அதிகாரிகள் வந்து விசாரணைநடத்தினர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் வந்துதடயங்களைப் பதிவு செய்தனர்.
கொள்ளையர்களைப் பிடிக்க தனி போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது.