ஆதித்தனுக்கு மூலிகை ராமர் போட்ட நாமம்
சென்னை:
மூலிகை பெட்ரோல் ராமரிடம் ஏமாந்த முன்னாள் த.மா.கா. அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் போலீசில் புகார் செய்ய முடிவுசெய்துள்ளார்.
இதோ மூலிகையில் இருந்து பெட்ரோல் என்று சொல்லிய மூலிகை ராமர் பிள்ளையிடம் ஏமாந்தவர்கள் ஏராளம். அவர்தயாரிப்பது ரசாயன பொருட்கள் கலந்த மோசடியான, மோசமான பெட்ரோல் என்பதை சி.பி.ஐ. கண்டுபிடித்தனர்.
ராமர் பிள்ளையுடன் பிசினசில் கூட்டாளி ஆனால், நிறைய பணம் சம்பாதிக்கலாம் என வாயை பிளந்த பல முக்கிய பிரபலங்கள்அவருக்கு நிதி உதவி செய்தனர்.
அதில் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தனும் இருக்கிறார் என்பது தான் இப்போதைய தகவல். மூலிகை ராமர் மீதுமோசடிக் குற்றச்சாட்டுக்களை அடுக்கி சி.பி.ஐ. வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் ராமருக்கு எதிராக சாட்சி சொல்லப்போகிறார் ஆதித்தன்.
தமிழ் மாநில காங்கிரஸ் முக்கிய புள்ளிகளில் ஒருவரான ஆதித்தன் கூறுகையில், நான் குஜ்ரால் அரசில் மத்திய அமைச்சராகஇருந்தபோது என்னை ராமர் பிள்ளை தொடர்பு கொண்டார். பெட்ரோலுக்கு மாற்றாக மூலிகைகளை கொண்டு பெட்ரோல்தயாரிப்பதாக கூறினார்.
தனது ஆராய்ச்சியை தொடர உதவி செய்யுமாறு கேட்டார். அவரது கண்டுபிடிப்பு அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்பட்டால் நாட்டுக்குஏராளமான அந்நிய செலாவணி மிச்சமாகும். மேலும் ஒரு தமிழன் உலக அளவில் புகழ் பெறுவானே என்ற எண்ணத்தில் ராமர்பிள்ளைக்கு பண உதவி செய்தேன்.
ஆனால், ரசாயன பொருட்களை கலந்து மூலிகை பெட்ரோல் என்று ராமர் மோசடி செய்துள்ளார். என்னை ஏமாற்றி பணம் வாங்கியராமர் பிள்ளை மீது போலீசில் புகார் செய்வேன் என்றார்.