அக்.9-ம் தேதி முதல் புழக்கத்துக்கு வருகிறது புதிய 1000 ரூபாய் நோட்டு
மும்பை:
புதிய 1000 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி வரும் திங்கள்கிழமை (அக்டோபர் 9-ம்தேதி) வெளியிடுகிறது.
சாம்பல் நிறப் பின்னணியில் இளஞ்சிவப்பு நிறத்தில் அச்சிடப்படும் இந்த ரூபாய்நோட்டில் மகாத்மா காந்தி உருவம், ரிசர்வ் வங்கி முத்திரை, வங்கி ஆளுநர்கையெழுத்து மற்றும் ரூ. 1000 என்ற ஆகியவை இன்டால்கோ முறையில்அச்சிடப்பட்டிருக்கும்.
சுமார் 177 மில்லிமீட்டர் நீளமும், 73 மில்லிமீட்டர் அகலமும் கொண்டதாக இந்த புதியரூபாய் நோட்டு இருக்கும். இந்த ரூபாய் நோட்டில் புதுமையான வகையில் புதுவிதமையில் ரூ.1000 என்ற எண் அச்சிடப்பட்டிருக்கும்.
நேராக பார்த்தால் பச்சை நிறமாகும், ஒருபுறம் சாய்வாகப் பிடித்துப் பார்த்தால் நீலநிறமாகும் அந்த எண்கள் தெரியும். இந்த நோட்டில் மற்ற ரூபாய் நோட்டுகளில்உள்ளதைப் போல் நீரோட்டம், நூலிழை, முத்திரை ஆகிய பாதுகாப்பு அம்சங்களும்இடம் பெற்றிருக்கும்.












Click it and Unblock the Notifications