புடின் வரவேற்பில் யானைகள் இல்லை - ரஷ்ய மக்கள் ஏமாற்றம்
மாஸ்கோ:
இந்தியாவுக்கு 3 நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்ட ரஷ்ய அதிபர் விளாடிமிர்புடினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆனால் அந்த வரவேற்பில் யானைகள் கலந்து கொள்ளாதது ரஷ்ய மக்களுக்குப்பெரும் ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அஹித்துள்ளது.
கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்ட முதல் ரஷ்ய அதிபர்விளாடிமிர் புடின் என்பது குறிப்பிடத்தக்கது.
யானைகள் மீது ரஷ்யர்கள் அதிக ஆர்வமும், அன்பும் கொண்டவர்கள். இதை உணர்ந்தஇந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு, 1955-ல் தனது முதல் ரஷ்யஅரசுமுறைப் பயணத்தின்போது இரு யானைக் குட்டிகளை ரஷ்யாவுக்குப் பரிசளித்தார்.
யானைச் சவாரி செய்வதற்காகவே பல ரஷ்யர்கள் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம்வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில், புடினுக்கு டெல்லியில்அளிக்கப்பட்ட பிரம்மாண்ட வரவேற்பில் யானைகள் பங்கேற்காதது ரஷ்ய மக்களுக்குபெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தங்கள் நாட்டின் இளம் அதிபர், யானை மீது அமர்ந்து சவாரி செய்வதைதொலைக்காட்சியில் கண்டு ரசிக்க ரஷ்யர்கள் மிகுந்த ஆவலுடன் இருந்தனர். ஆனால்,அத்தகைய நிகழ்ச்சி ஏதும் நடைபெறவில்லை.
கடந்த மார்ச் மாதம் இந்தியா வந்த அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் யானைகளுடன்சுதந்திரமாகப் பழகினார். யானைச் சவாரியும் செய்தார்.
அதேபோன்ற தங்களது அதிபரும் யானைச் சவாரி செய்வார் என்று ரஷ்யர்கள்எதிர்பார்த்தனர். பில் கிளின்டனின் பயணத்துடன் புடினின் பயணத்தையும் ஒப்பிட்டுப்பார்த்த அந்த எதிர்பார்ப்பில் ரஷ்யர்கள் இருந்தனர்.
கிளின்டன் தங்கிய மவுரியா ஹோட்டலில் புடினும் தங்கினார். கிளின்டன் சென்றதாஜ்மகாலுக்கும் மனைவியுடன் புடின் சென்றார். அதேபோல் கிளின்டனைப் போலவேபுடினும் தனது பயணத்தை மும்பையில் முடித்துக் கொண்டு நாடு திரும்பினார்.
ஆனால், கிளின்டன் மேற்கொண்ட யானைச் சவாரியை புடின் மேற்கொள்ளவில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications