For Daily Alerts
Just In
திருமலை பிரம்மோற்சவம் 8-வது நாள்
திருமலை பிரம்மோற்சவத்தில் நாளை (சனிக்கிழமை) 8-வது நாள் விழா நடக்கிறது.
காலை 7.10-க்கு ரத உற்சவம் நடை பெறும். அழகாக அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் பெருமாள் நகர் வலம்வருவார்.
இரவு 7 மணி முதல் 8 மணி வரை ஊஞ்சல் சேவை நடைபெறும். இரவு 9 மணி முதல் 11 மணி வரை பெருமாள் குதிரை வாகனத்தில் வலம் வருவார்.
கையில் சாட்டையுடன் எம்பெருமாள் குதிரையில் அமர்ந்து வருவது அவர் நம் கண்ணே வருபது போல் காண்பவரை மெய்சிலிர்க்க வைக்கும்அருட்காட்சியாகும்.
காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலும் சர்வ தரிசனம் நடைபெறும்.
Comments
Story first published: Friday, October 6, 2000, 5:30 [IST]