கள்ளச் சாராயத்தை ஒழித்துக் கட்டிய கிராமப் பெண்கள்
பெரம்பலூர்:
அரியலூர் அருகே கிராமத்தில் பெண்களும், இளைஞர்களும் சேர்ந்து கள்ளச் சாராயத்தை ஒழித்துக் கட்டியுள்ளனர்.இதையடுத்து இந்த ஊர் கள்ளச் சாராயம் இல்லாத கிராமம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கிராமப்புறங்களில் கள்ளச் சாராயம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கள்ளச் சாரய சாவுகளும் தொடர்ந்துகொண்டே உள்ளன.
இந் நிலையில் அரியலூர் அருகே உள்ள மேலராமநல்லூர் கிராமம் கள்ளச் சாராயம் இல்லாத கிராமமாகதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இங்கேயும் சில மாதங்களுக்கு முன் வரை கள்ளச்சாரயம் விற்கப்பட்டுத் தான் வந்தது. அரசு நிர்வாகத்தால் கூடஅதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இதையடுத்து பெண்களே ஒன்று சேர்ந்து கள்ளச் சாராயத்துக்கு எதிராக போர்க் கொடி எழுப்பினர். இவர்களுக்குநேரு யுவ கேந்திராவின் இளைஞர்களும் உதவி புரிய கள்ளச் சாராய வியாபாரிகளை ஊரை விட்டேவெளியேற்றிக் காட்டியிருக்கிறது இந்த கிராமம்.
இந்த கிராமத்துக்கு கள்ளச் சாராயம் இல்லாத கிராமம் என்ற பெயரை சூட்டி மகிழ்ந்தார் காவல்துறை மதுவிலக்குப்பிரிவுத் தலைவர் நடராஜ். ஊருக்குள் மாட்டு வண்டியில் மட்டுமே போக முடியும் என்பதால், தனது அரசு காரைஊருக்கு வெளியிலேயே நிறுத்திவிட்டு மாட்டு வண்டியில் ஏறிச் சென்று இந்த கிராமத்தை கெளரவப்படுத்தினார்நடராஜ்.
பதிலுக்கு அவரை பூர்ணகும்ப மரியாதையுடன் ஊருக்குள் அழைத்துச் சென்றது அந்த வெற்றிக் கிராமம்.












Click it and Unblock the Notifications