யுகோஸ்லோவியா: நான் தான் ஜனாதிபதி- எதிர்க் கட்சித் தலைவர் அறிவிப்புபாதாள அறையில் பதுங்கினார் இப்போதைய அதிபர்

Subscribe to Oneindia Tamil

Kostunicaபெல்கிரேட்:

யுகோஸ்லோவிய எதிர்க் கட்சித் தலைவர் கோஸ்டுனிகா தன்னை அதிபராக அரிவித்துக் கொண்டுள்ளர். இதுவரைஅதிபராக இருந்த மிலாசோவிக் தனது சொந்த ஊரான செர்பியாவில் பாதாள அறையில் பதுங்கி இருக்கிறார்.

மிலோசவிக்குக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

கோஸ்டுனிகா

கடந்த மாதம் நடந்த தேர்தலில் மிலோசவிக்கின் கட்சி தோல்வி அடைந்துவிட்டதாகவும் ஆனால், அதைமறைத்துவிட்டு அவர் ஆட்சியில் தொடர்ந்து வருவதாகவும் எதிர்க் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

முக்கிய எதிர்க் கட்சிக்கு 55 சதவீத ஓட்டுக்களும் மிலாசோவிக்குக்கு 33 சதவீத ஓட்டுகளும் விழுந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் கோஸ்டுனிகா கூறுகிறார். இவருக்கு பல மேற்கத்திய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

ஆனால், தனது கட்சிக்கு 48 சதவீத வாக்குகளும், எதிர்க் கட்சியினருக்கு 41 சதவீத ஓட்டுகளும் கிடைத்ததாகமிலோவிக் கூறி வருகிறார்.

தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி வாக்குகளை மிலோசவிக் திரித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்துஅவரை பதவி விலகக் கோரி கடந்த 2 வாரங்களாக போராட்டம் நடத்தி வரும் எதிர்க் கட்சியினரும்ஆர்பாட்டாக்காரர்களும் வியாழக்கிழமை நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் ஆயிரக்கணக்கில் நுழைந்தனர்.

பின்னர் நாடாளுமன்றத்துக்கு தீ வைத்தனர். ஆர்பாட்டக்காரர்களுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே நடந்தமோதலில் பல ராணுவத்தினர் காயமடைந்தனர்.

ஆர்ாட்டக்காரர்கள் டிவி நிலையத்துக்கும், காவல் நிலையத்துக்கும் தீ வைத்தனர். முன்னதாக செர்பியாவிலிருந்துநூற்றுக்கணக்கான கார்களில் மிலோவிக் ஆதரவாளர்கள் பெல்கிரேட் வந்தனர்.

அதிபர் மிலோசவிக்குக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து வலுத்து வருகிறது. ஆயிரக்கணக்கானதொழிலாளர்களும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நிலக்கரி சுரங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும்போராட்டத்தில் குதித்துள்ளதால், நாடு முழுவதும் மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அரசுத் தொலைக்காட்சி நிலையத்தை எதிர்க் கட்சி தனது கட்டுப்பாட்டில் வைத்துக் எடுத்துக்கொண்டுள்ளது. இந்தப் போராட்டஙகளின் பின்னணியில் மேற்கத்திய நாடுகளின் ரகசிய பிரிவுகள் இருக்கலாம்எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

பாதாள அறையில் பதுங்கியுள்ள அதிபர்:

தனக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருவதால் அதிபர் மிலோசவிக் செர்பியாவில் பாதாளஅறையொன்றியில் ராணுவத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ருமேனியா-பல்கேரிய எல்லைகளுக்கு அருகே பெல்ஜானிகா என்ற கிராமத்தில் இந்த பாதாள அறை இருப்பதாகக்கூறப்படுகிறது. ராணுவத்தின் 92-வது இன்பானட்ரி பிரிவும் மேலும் சில பிரிவுகளும் சேர்ந்து அவரை பாதுகாத்துவருகின்றன.

அவர் ராணுவத்தின் உதவியுடன் மீண்டும் நாடாளுமன்றத்தைக் கைப்பற்ற முயற்சிக்கலாம் எனத் தெரிகிறது.

மிலோசவிச் பதவி விலக பிரிட்டன் கோரிக்கை:

இந் நிலையில் மிலோசவிக் உடனடியாக பதவி விலக வேண்டும் என பிரிட்டிஷ பிரதமர் டோனி பிளேய்ர்கோரியுள்ளார்.

தேர்தல் முடிவுகளும், மக்களின் போராட்டமும் மிலோசவிக்குக்கு எதிராக உள்ளன. இதை உணர்ந்து மிலோசவிக்உடனே பதவி விலக வேண்டும். மேலும் உயிர் பலிகள் ஏதும் நடப்பதற்கு முன் அவர் பதவி விலக வேண்டும்எனறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+