3 வயது சிறுமியிடம் சில்மிஷம் - காமக்கொடூரன் கைது
சென்னை:
மூன்று வயது சிறுமியிடம் காம இச்சையை தீர்த்துக் கொள்ள முயன்ற 22 வயதுகாமக்கொடூரன் கைது செய்யப்பட்டான்.
இது பற்றிக் கூறப்படுவதாவது:
சென்னையை அடுத்த மதுரவாயல் அருகே சின்னநூலாம்பூரில் வசிப்பவர் பழனி. லாரிடிரைவராகப் பணியாற்றி வருகிறார். இவரது மகள் வினோதினி (3).
பழனியின் பக்கத்து வீட்டில் வசிப்பவர் ராஜேந்திரன் (22). கூலி வேலை பார்த்து வரும்இவர், சம்பவத்தன்று வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி வினோதினியைடி.வி. பார்க்கலாம் வா என்று வீட்டுக்குள் அழைத்துச் சென்றார்.
கதவைப் பூட்டி விட்டு ஒன்றுமறியாத அந்த சிறுமியிடம் காம இச்சையை தணித்துக்கொள்ள முயன்றுள்ளார். உடனே அந்த சிறுமி போட்ட கூச்சலைக் கேட்டுஅக்கம்பக்கம் இருந்தவர்கள், வீட்டு கதவை வந்து தட்டினர்.
தன்னிடம் ராஜேந்திரன் நடந்து கொண்டதைப் பற்றி குழந்தை அழுது கொண்டேசொன்னது. சிறுமியின் தந்தை பழனி கோபமடைந்து ராஜேந்திரனை கண்டிக்க அவரைதாக்கி விட்டு ஓடிவிட்டான் ராஜேந்திரன்.
பின்னர் பழனி கொடுத்த புகாரின் பேரில் ராஜேந்திரனைப் போலீஸார் கைது செய்துசிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications