For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோவையிலிருந்து ஐரோப்பாவுக்கு நேரடி சரக்கு விமானப் போக்குவரத்து

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

கோவையிலிருந்து முதல் முறையாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளுக்குதனியார் சரக்கு விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

இந்த விமானப் போக்குவரத்தை ஐஸ்வர்யா விமான சர்வீஸ் கம்பெனிதொடங்கியுள்ளது. இதுவரை கோவையிலிருந்து சார்ஜா போன்ற நாடுகளுக்குப்பயணிகள் விமானம் மட்டுமே இயக்கப்பட்டது.

இப்போது தொடங்கப்பட்டுள்ள தனியார் விமான சரக்குப் போக்குவரத்தால் திருப்பூர்,கோவை, பொள்ளாச்சி மற்றும் கேரளாவில் உள்ள ஏற்றுமதியாளர்கள் பயன்பெறமுடியும்.

கோவையிலிருந்து மத்திய கிழக்கு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குவாரம் இரு முறை இந்த விமான சர்வீஸ் இருக்கும்.

பெங்களூர், சென்னை ஆகிய நகரங்களில் இருந்தும் தனியார் துறையில் இத்தகையசரக்கு விமானப் போக்குவரத்தைத் தொடங்க ஐஸ்வர்யா விமான சர்வீஸ் நிறுவனம்திட்டமிட்டுள்ளது.

இது குறித்து அந் நிறுவன இயக்குநர் பாலு நிருபர்களிடம் கூறியதாவது:

கோவையிலிருந்து புறப்படும் இந்த சரக்கு விமானம் நேரடியாக சார்ஜா, ஐரோப்பிமற்றும் அமெரிக்க நாடுகளுக்குச் செல்கிறது.

18 டன்கள் எடையுள்ள இந்த சரக்கு விமானத்தில் 15 டன் சரக்குகளை ஏற்றிச்செல்லலாம். கோவையிலிருந்து புதன் மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 5.30 மணிக்குவிமானம் புறப்படும்.

பனியன் ஏற்றுமதியாளர்கள், மற்றும் கூரியர் சர்வீஸ் நிறுவனத்தினர் இந்த விமானசர்வீஸைப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

ஐரோப்பிய நாடுகளுக்கு எடுத்துச் செல்லும் சரக்குகளுக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.93-ம்,அமெரிக்க நாடுகளுக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.143-ம் கட்டணமாகநிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சார்ஜாவிலிருந்து திரும்பும்போது திருவனந்தபுரம், கோழிக்கோடு வழியாககோவையை விமானம் வந்தடையும். இதன் மூலம்

கேரள மாநிலத்தில் உள்ள ஏற்றுமதியாளர்களும் பயன்பெறுவர் என்றார் பாலு.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X