சோட்டா ராஜனை இந்தியாவுக்குக் கொண்டு வர மும்பை போலீஸ் நடவடிக்கை

Subscribe to Oneindia Tamil

மும்பை:

தாய்லாந்தில் சிகிச்சை பெற்று வரும் மும்பை தாதா சோட்டா ராஜனை இந்தியாவுக்குக் கொண்டு வரும் முயற்சியில்மும்பை போலீஸார் ஈடுபட்டுள்ளதாக மகாராஷ்டிர துணை முதல்வர் ஜக்கன் புஜ்பல் தெரிவித்தார்.

மும்பை தாதாவான சோட்டா ராஜன், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் மற்றொரு மும்பை தாதாவான தாவூத்இப்ராஹிம் கூட்டாளிகளால் துப்பாக்கியால் சுடப்பட்டார்.

இதையடுத்து பாங்காக் மருத்துவமனையில் சோட்டா ராஜன் சேர்க்கப்பட்டுள்ளார். இந் நிலையில், போலிபாஸ்போர்ட்டுடன் தாய்லாந்துக்குள் நுழைந்ததாக சோட்டா ராஜனை தாய்லாந்து போலீஸார் கைது செய்துள்ளனர்.

சோட்டா ராஜன் மீது மும்பையில் பல வழக்குகள் உள்ளன. அதற்காக அவரை இந்தியாவுக்குக் கொண்டு வரமும்பை போலீஸார் முயன்றனர். ஆனால், அவர் மீது போலி பாஸ்போர்ட் வழக்கு உள்ளது. அவ் வழக்கு முடியும்வரை அவரை இந்தியாவுக்கு அனுப்ப முடியாது என்று தாய்லாந்து போலீஸார் கூறிவிட்டனர்.

இருப்பினும், அவரை மும்பைக்குக் கொண்டு வரும் முயற்சியில் மும்பை போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகசக்ணீன் புஜ்பல் கூறியுள்ளார்.

விசாரணைக்காக ஆட்களை அழைத்துச் செல்ல தாய்லாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையே எந்த ஒப்பந்தமும்இல்லை. இதனால், பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

ஒரு நாட்டில் இருந்து விசாரணைக்காக ஒரு நபரை அழைத்து வருவது என்பது சிக்கலான விஷயம். சோட்டாராஜன் விவகாரத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், உக்ஷPadma_vowelsn_Iதுறை அமைச்சர் அத்வானிஆகியோரைத் தொடர்பு கொண்டு பாங்காக் ஹை கமிஷனுடன் பேசும்படி கேட்டுக் கொண்டுள்ளோம்.

போலி பாஸ்போர்ட் மூலம் தாய்லாந்துக்குச் சோட்டா ராஜன் சென்றுள்ளார். ஆகவே, அவரை எந்த நாட்டையும்சாராதவர் என்ற முறையில் இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் மும்பை போலீஸார் நடவடிக்கையில்ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக தாய்லாந்து அரசுக்கும் கோரிக்கை விடப்பட்டுள்ளது என்றார் ஜக்கன் புஜ்பல்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+