சென்னையில் திருக்குறள் கொலு கண்காட்சி
சென்னை:
திருக்குறளை மையமாக வைத்து புதுமையான கொலு கண்காட்சி சென்னையில்நடைபெற்றது.
தி.நகரில் நடைபெற்ற இக் கண்காட்சியை மகளிர் எக்ஸ்நோரா அமைப்பு நடத்தியது.இக் கண்காட்சியை தமிழக முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள்தொடக்கி வைத்தார். அமைப்பின் தலைவர் சுலோச்சனா ராமசேஷன் தலைமைதாங்கினார்.
திருக்குறளை மையமாக வைத்து நடத்தப்பட்ட இப் புதுமையான கொலுக்கண்காட்சியில் சென்னை நகரில் உள்ள 8 பள்ளிகள், 2 கல்லூரிகள் கலந்து கொண்டன.
கொலுவில் திருக்குறளின் ஏதாவது ஒரு குறளை மையமாக வைத்து அக்குறளின்கருத்தை விளக்கும் வகையில் பொம்மைகளை வடிவடைத்திருந்தனர். அந்த குறளின்சிறப்பையும், பொருளையும் பார்வையாளர்களுக்கு மாணவ மாணவிகள் விளக்கினர்.
இதுதவிர மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
குறள் கொலு கண்காட்சி முடிவில் கண்காட்சியில் பங்கேற்ற பள்ளிகள், கல்லூரிகளுக்குவிருதுகள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் கவிஞர் வைரத்து மனைவி பொன்மணி வைரமுத்து, நடிகை ரேவதி,மேயர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் உள்பட பலர் கலந்துகொண்டனர்.