சின்னசேலம் தபால்நிலையம் அருகே டைம்பாம்
விழுப்புரம்:
சின்னசேலம் தபால் நிலையம் அருகே வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்ய நிபுணர்கள் விரைந்துள்ளனர்.
சின்னசேலம் தபால் நிலையத்தின் அருகிலுள்ள மளிகைக் கடை ஒன்றின் அருகில் ஒரு பார்சல் கிடந்தது. பாக்கெட் ரேடியோ சைசில் ஒரு பொட்டலம் ஓலைக்கூடையினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
அதன்மேல் சிகப்பு நிற டேப்பினால் சுற்றப்பட்டு, ஒரு மீட்டர் வயர் இணைப்பும் கொடுக்கப்பட்டிருந்தது. சின்னக் கடிகாரமும், குறிப்பிட்ட நேரத்தில்வெடிக்கும் படியுள்ள கடிகாரமும் செட் செய்யப்பட்டிருந்தது.
கூடையில் இருந்த கடிகாரம் செயல்பட்டுக் கொண்டிருந்ததால் பொதுமக்கள் எந்நேரமும் குண்டு வெடிக்கலாம் என பீதியடைந்ததுள்ளனர். இதையடுத்துசின்னசேலம் தபால் நிலைய அதிகாரி போலீஸில் புகார் செய்தார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் வெடிகுண்டைக் கைப்பற்றி போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். ஆனால் போலீஸ் நிலையம்கொண்டு செல்லும் வரை வெடிகுண்டு வெடிக்கவில்லை.
போலீஸ் நிலையத்தில் வெடிகுண்டைச் சுற்றி மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து சென்ற நிபுணர்குழு வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications