உடல்நலம் தேறுகிறார் விசிறி சாமியார்
சென்னை:
சென்னை தி.நகர் ஸ்ரீரமணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விசிறி சாமியார் எனப்படும் யோகி ராம் சுரத்குமார் உடல்நலம் தேறி வருகிறார்.
கடந்த ஆகஸ்ட் 17 ம் தேதி சென்னை, தி.நகரில் உள்ள ஸ்ரீரமணா மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். டாக்டர் ரங்க பாஷ்யம்அவருக்குச் சிகிச்சை அளித்து வந்தார்.
யோகிராம் சுரத்குமார் உடல்நிலை தேறிய நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 11 ம் தேதி அவருக்கு டாக்டர் ரங்கபாஷ்யம் அறுவை சிகிச்சைசெய்தார். இதையடுத்து யோகிராம் உடல்நிலையில் நல்ல மாற்றம் ஏற்பட்டது.
அவர் விரைவாக உடல்நலம் தேறியதையடுத்து அவருக்குச் சிகிச்சையளித்த டாக்டர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். யோகிராம் இப்போதுவழக்கம் போல் சாப்பிடுகிறார். இன்னும் 3 அல்லது 4 வாரங்களில் யோகிராம் முற்றிலும் உடல்நலம் தேறி விடுவார் என்று டாக்டர்கள்தெரிவித்தனர்.
பக்தர்கள் வருகை: சென்னையில் சிகிச்சை பெற்று வரும் யோகிராம் சுரத்குமாரை தரிசிக்க பக்தர்கள் திரண்டு வருகின்றனர். சிகிச்சை முடியும் வரைஅவரை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம். அவருக்கு நல்ல ஓய்வு தேவை. பூரண குணமடைந்து திருவண்ணாமலை சென்றபிறகு பக்தர்கள் தரிசனம்கொடுப்பார் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.