14ம் தேதி சேலத்தில் பா.ஜ.க. மாநாடு
சேலம்:
சேலத்தில் வரும் அக்டோபர் 14ம் தேதி பாரதிய ஜனதாக் கட்சியின் பெருங்கோட்ட மாநாடு நடக்கிறது.
இதில் 10 மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, பொன். ராதாகிருஷ்ணன்ஆகியோர் பங்கேற்கின்றனர்.
பாரதிய ஜனதாக் கட்சி அடுத்து வரும் தேர்தலில் போட்டியைச் சந்திக்க தயார்படுத்தி வருகிறது. இதையடுத்து அடுத்தடுத்துஅமைச்சர்கள் தமிழகத்தின் பக்கம் அமைச்சர்களின் பார்வை திரும்பியுள்ளது.
சமீபத்தில் பொள்ளாச்சியில் நடந்த தமிழ்நாடு பா.ஜ.க. செயற்குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து, பா.ஜ.க. பெருங்கோட்டம் எனஅழைக்கப்படும் 10 மாவட்டங்களின் நிர்வாகக் குழுக் கூட்டம் சேலத்தில் அக்டோபர் 14ம் தேதி நடக்கிறது.
இந்தக் கூட்டத்தில், அகில இந்திய பாரதிய ஜனதாக் கட்சியின் துணைத் தலைவர் ஜனா. கிருஷ்ணர்த்தி, மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி மற்றும் தமிழ பா.ஜ.,எம்.எல்.ஏ.க்கள், வெங்கிடசாமி, வேலாயுதன் மற்றும் முக்கியத் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
சேலம் அம்மாபேட்டையில் நடக்கும் இந்த மாநாட்டில் மாலை 4 மணிக்கு ஊர்வலமும் இரவில் பொதுக் கூட்டமும் நடக்கிறது.
இந்தக் கூட்டத்தில் வாஜ்பாய் அரசின் சாதனைகள், பெட்ரோலிய விலை உயர்வு, அடுத்து வரும் தேர்தலைச் சந்திக்க தேவையானநடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளன.












Click it and Unblock the Notifications