"ஆன்லைன் வர்த்தகத்தில் இறங்குகிறது செஞ்சுரியன் வங்கி
கோவை:
செஞ்சுரியன் பாங்க், இன்டர்நெட் மூலம் தேயிலை வர்த்தகம் நடத்த உரிய வசதிகளைமேற்கொண்டு வருகிறது. மேலும், இந்தியா முழுவதிலும் எங்கு வேண்டுமானாலும்பணம் பெறும் வசதியையும் அளிக்க உள்ளது.
இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகள் தற்போது "ஆன்லைன் வர்த்தகத்த்திற்குத்தயாராகி வருகின்றன. இந்த வகையில் செஞ்சுரியன் வங்கியும் தற்போது களம்இறங்கியுள்ளது.
இந்தியா முழுவதிலும் 39 கிளைகளைக் கொண்ட இந்த வங்கி, 40 வது கிளையைகடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கோவையில் துவக்கியது.
38 ஆயிரம் கோடியை வர்த்தக அளவாகக் கொண்டுள்ள இந்த வங்கிக்குமுன்னோடியாக "21 பர்ஸ்ட் செஞ்சுரி பைனான்ஸ் என இயங்கி வந்தது. தற்போதுரிசர்வ் பாங்க்கின் அதிகாரம் கிடைக்கப் பெற்றதையடுத்து செஞ்சுரியன் வங்கியாகஉருவாகியுள்ளது.
வங்கியின் செயல்பாடு குறித்து நிர்வாக இயக்குநர் சுப்பையன் கூறுகையில், இந்தவங்கி தேயிலை வர்த்தகத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காகடீஆக்ஷன்.காம் என்ற வெப்சைட்டை கைப்பற்றியுள்ளது. இதில் 26 சதவீதப் பங்குஇந்த வங்கிக்கு உள்ளது.
இந்த இன்டர்நெட் தளம் மூலம் தேயிலை வர்த்தகம் மேற்கொள்ளப்படும். இதில்நடக்கும் அனைத்து பண பறிமாற்றம், ஆன்லைன் மூலம் செயல்படுத்த முடியும்என்றார்.












Click it and Unblock the Notifications