கலைக் கல்லூரி மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி
சென்னை:
தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் 60 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்கம்ப்யூட்டர் பயிற்சித் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசுதெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:
இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவது குறித்து விவாதிப்பதற்காக கல்லூரிமுதல்வர்கள் கூட்டம் 10ம் தேதி செவ்வாய்க்கிழமை கூட்டப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மாநாட்டு அரங்கில் நடைபெறும் இந்த கூட்டத்தில்முதல்வர் கருணாநிதியின் தகவல் தொழில்நுட்ப ஆலோசகர் டாக்டர்அனந்தகிருஷ்ணன், முதல்வரின் செயலாளர் அசோக் வரதன் ஷெட்டி, தமிழகமின்னணுவியல் கழகத் தலைவர் ஞானதேசிகன் மற்றும் உயர் கல்வித் துறை கூடுதல்செயலாளர் ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
கம்ப்யூட்டர் பயிற்சியை கல்லூரிகளில் செயல்படுத்துவதற்காக தேர்வுசெய்யப்பட்டுள்ள சென்னை என்.ஐ.ஐ.டி, எஸ்.ஆர்.எம். சிஸ்டம்ஸ், கோவைராமச்சந்திரா சிஸ்டம்ஸ் ஆகிய கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனத்தினரும் இக்கூட்டத்தில்பங்கேற்பார்கள்.
இந்த திட்டத்தை நல்ல முறையில் செயல்படுத்துவதற்கான வழிகாட்டும்நெறிமுறைகளும், ஆலோசனைகளும் இக்கூட்டத்தில் வழங்கப்படும் என்று தமிழகஅரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications