32-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை
சேலம்:
மேட்டூர் அணையில் நீர்மட்டம், 32 வது முறையாக 120 அடியை எட்டியுள்ளது.
மேட்டூர் அணை ரூ. 5 கோடி செலவில் 1925 ம் ஆண்டு கட்டத்தொடங்கி 1934 ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.இதன் நீளம் 5 ஆயிரத்து 300 அடி. உயரம் 124 அடி.
இதில் 93 ஆயிரத்து 50 மில்லியன் கனஅடி நீரை சேமித்து வைக்கலாம். மேட்டூர் அணை மூலம் ஈரோடு, சேலம்,தஞ்சை, திருச்சி, நாகப்பட்டினம் மற்றும் கரையோரப் பகுதிகளில் உள்ள 16.05 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள்காவிரி டெல்டா பாசனத்தின் மூலம் பயனடைகிறது.
ஞாயிற்றுக்கிழமை அணையின் நீர்மட்டம் 120.320 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 44 ஆயிரத்து 592கன அடி நீர்வரத்து இருக்கிறது.
இதுகுறித்து காவிரி வட்ட கண்காணிப்பு பொறியாளர் சிவபிரகாசம் கூறியதாவது:
அணை கட்டி முடிக்கப்பட்ட இந்த 66 ஆண்டுகளில் 32 வது முறையாக நீர் மட்டம் 120 அடியைத் தாண்டியுள்ளது.அணை நிரம்பியுள்ளதால் நீண்ட நாட்களுக்கு அணையில் நீரைத் தேக்கி வைக்க முடியாத சூழ்நிலைஉருவாகியுள்ளது. காவிரி கரையோரப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைசெய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்புக் கருதி இப்பகுதி வழியே செல்லும் லாரிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. செயற்பொறியாளர்சுப்ரமணியன், பொறியாளர் வசந்தன் மற்றும் சண்முகம் ஆகியோர் அணையை 24 மணிநேரமும் கண்காணித்துவருகிறார்கள் என்றார் சிவபிரகாசம்.












Click it and Unblock the Notifications