அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம், ஜெ. சுற்றுப் பயணம் ஒத்தி வைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் செவ்வாய்க்கிழமை (10ம் தேதி) கூடவிருந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது வைக்கப்பட்டுள்ளது. அதே போல தென் மாவட்டங்களில் ஜெயலலிதா மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணமும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கை:

நீதிமன்றத் தீர்ப்பு வெளிவரும் முன்னரே அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளை ஆங்காங்கே மாவட்ட அளவிலும், ஒன்றிய நகரஅளவிலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் காவல் துறையினர் கைது செய்து விட்டனர்.

தீர்ப்பு வெளிவரும் முன்னரே தொடங்கிய இந்த கைது நடவடிக்கை தீர்ப்புக்கு பின்னரும் தொடர்கிறது. அதிமுகவினரை கைதுசெய்யும் தகவல் வந்த வண்ணம் உள்ளது.

கருணாநிதி அரசு திட்டமிட்டே நாளை நடக்கவிருந்த பொதுக்குழுக் கூட்டத்திற்கு மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் வந்து சேரமுடியாத செயற்கையான நிலையை உருவாக்க முயன்று வருவதால், பொதுக்குழு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் 15ம் தேதி முதல் தென் மாவட்டங்களில் ஜெயலலிதா சுற்றுப் பயணம் செய்வதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.அந்த சுற்றுப் பயணத் திட்டத்தை சிறப்போடு நடத்த ஏற்பாடு செய்ய வேண்டிய அதிமுக நிர்வாகிகள் அனைவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் மீது வெளியே வர முடியாத வகையில் பல்வேறு வழக்குகள் புனையப்பட்டுள்ளன. தென் மாவட்ட சுற்றுப் பயணத்தைசீர்குலைக்கும் வகையில் கருணாநிதி அரசு அதிமுகவினரை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது.

எனவே ஜெயலலிதாவின் சுற்றுப் பயணம் ஒத்தி வைக்கப்படுகிறது. மாற்றுத் திட்டம் பின்னர் அறிவிக்கப்படும் என்றுகூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+