பெண்ணிடம் ரூ. 3000 மோசடி .. போலி சாமியார் கைது
கோவை:
நள்ளிரவில் காளி பூஜை செய்வதாகக் கூறி ஏழைப் பெண்ணிடம் பணம் மோசடி செய்தபோலிச் சாமியரைப் போலீசார் கைது செய்தனர்.
கோவை மசக்களிபாளையத்தைச் சேர்ந்தவர் மணி (54). இவரிடம் பலர் அருள் வாக்குகேட்க வந்து கொண்டிருந்தனர். குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்த்து வைக்கபரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறி, பலரிடம் மணி பணம் பறித்து வந்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு மணியிடம் செங்கோடான்பாளையம் என்ற ஊரைச் சேர்ந்தசெல்வி (35) என்பவர் அருள் வாக்கு கேட்க வந்தார். செல்வி விதவைப் பெண். இவர்தனது மகள் மகேஸ்வரியுடன் வாழ்ந்து வருகிறார். இவருக்கும் இவரது தாயாருக்கும்இடையே சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மணியிடம் கூறினார்.
போலிச் சாமியரான மணி, தாய்-மகள் சண்டைக்கு காரணம், ஒரு தாயத்து உங்களதுவீட்டின் முன்பு புதைத்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த மந்திர தாயத்து செப்புத் தகடால்ஆனது. இதனை எடுக்க ரூ. 3 ஆயிரத்து 500 ரூபாய் செலவாகும். பணத்திற்கு ஏற்பாடுசெய் எனக் கூறி அனுப்பி வைத்தார்.
வீடு திரும்பிய செல்வி, 3 ஆயிரத்து 500 ரூபாய்க்கு என்ன செய்வதென்று விழித்தார்.கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் செல்வி, வட்டிக்கு கடன் வாங்கிக்கொடுத்தார். பின்னர் மணி, செப்புத் தகடை எடுக்க நள்ளிரவில் பூஜை செய்யவேண்டும், இதற்கு தயாராக வரும்படி கூறியுள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த செல்வி, பகலிலேயே பூஜை செய்து கொள்ளலாம்.இல்லையென்றால் பூஜையே வேண்டாம், பணத்தை திருப்பிக் கொடுங்கள் எனக்கேட்டுள்ளார்.
இதற்கு மணி, கொடுத்த பணத்தை திருப்பித் தர முடியாது எனக் கூறியுள்ளார். செல்விபணத்தை திருப்பித் தர வற்புறுத்தவே, மணி மிரட்டத் தொடங்கினார். அவரது வீட்டில்தாயத்து வைத்து புதிய பிரச்னைகளை உண்டாக்கி விடுவேன் என மிரட்டல் விடுத்தார்.
இதையடுத்து, அதிர்ச்சியடைந்த செல்வி, சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப் பதிவு செய்து மணியைக் கைது செய்தனர். அவரது வீட்டில்போலீசார் சோதனை நடத்தினர். இதில், பூஜைக்கு பணம் கொடுத்து ஏமந்தவர்களின்பட்டியல், மற்றும் செப்புத் தகடுகள் கிடைத்தன. அவற்றைப் போலீஸார் பறிமுதல்செய்தனர்.
மற்ற சாமியார்களைப் போல அல்லாமல், நவீன உடையில் மழு மழுவென சேவ்செய்து, காவி உடையில் இவர் மோசடி செய்து வந்துள்ளார். முன்பு தாடி வைத்திருந்தஇவர் .பிரேமானந்தாவின் கைதுக்கு பின்னர், தாடியை எடுத்து விட்டாராம்.