விமானத்தில் உயிர் இழந்த பெண்
சென்னை:
ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பெண் ஒருவர் விமானத்திலேயே இறந்தார்.
ஐதராபாத்தில் இருந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று ஞாயிறுக்கிழமை நள்ளிரவு சென்னை வந்து சேர்ந்தது. விமானநிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டதும், பயணிகள் இறங்கினர். ஒரு பெண் மட்டும் இருக்கையில் இருந்தார்.
அவரை இறங்கச் சொல்வதற்காக பணியாளர்கள் சென்று பார்த்தபோது, அவர் மயக்கமான நிலையில் இருந்தார். உடனடியாகஅவரை தூக்கிக் கொண்டு விமானத்தை விட்டு வெளியே வந்தனர்.
விமான நிலைய டாக்டர்கள் அவரை பரிசோதித்தபோது அவர் உயிர் பிரிந்திருந்தது.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் அப்பெண்ணின் பெயர் ஜெகன்மோகினி (52). ஆந்திராவைச் சேர்ந்த இவர் புற்றுநிாேயால்பாதிக்கப்பட்டவர்.
சென்னை அப்பல்லோ கேன்சர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக விமானத்தில் வந்த போது இறந்துள்ளார் என்பதுதெபியவந்தது. தகவல் தெரிந்து அடுத்த விமானத்தில் அவரது கணவர் சென்னை வந்தார்.
மனைவியின் உடலை பெற்றுச் சென்றார்.