எம்.ஜி.ஆர் சிலைக்கு அனுமதி மறுப்பா? ஜெ. ஆவேசம்
சென்னை:
திண்டுக்கல், ஆண்டிப்பட்டி பகுதிகளில் எம்.ஜி.ஆர். சிலைகளை அமைக்க அரசு அனுமதி அளிக்காவிட்டால் நானேதலைமை ஏற்று போராட்டம் நடத்துவேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து ஜெயலலிதா சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் அக்டோபர் 15 ம் தேதியும், திண்டுக்கல்லில் அக்டோபர் 22 ம் தேதியும்எம்ஜிஆர் சிலைகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்து கொள்ளும் விதத்தில் சுற்றுப்பயணம்மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்.
ஆனால், இதற்கு அனுமதி தராமல் திமுக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இது திமுக வின் உள்நோக்கத்தையேகாட்டுகிறது.
ஒரு இடத்தில் சிலை அமைக்க வேண்டுமானால் அதற்கான அனுமதி கேட்டு உள்ளாட்சித் துறைக்குவிண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும். பின்னர் அத்துறை அமைச்சரின் பரிந்துரையுடன் முதல்வருக்குசம்பந்தப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும். முதல்வர் அதை சரிபார்த்து அனுமதி வழங்க வேண்டும்.இதுதான் நடைமுறையில் இருந்து வரும் வழக்கம்.
நான் முதல்வராக இருந்தபோது இதே போல் சிலை அமைக்க வரும் கோரிக்கைகளில் பாகுபாடின்றி நடந்துகொண்டேன். சிலை அமைக்க திமுக அரசு அனுமதி தர மறுத்தால் நானே தலைமையேற்று போராட்டம்நடத்துவேன் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications