காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்க வாஜ்பாய் முன்வர வேண்டும்
ஸ்ரீநகர்:
காஷ்மீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண, பிரதமர் வாஜ்பாய் ஹூரியத் அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என்று அகில இந்தியஹூரியத் அமைப்பின் மூத்த செயற்குழு உறுப்பினர் அப்துல் கனி தெரிவித்தார்.
ஹூரியத் அமைப்பின் சார்பில் ஸ்ரீநகரில் மாநாடு நடந்தது. இதில் கலந்து கொண்டு சுமார் 45 நிமிடம் உரையாற்றிய அப்துல் கனி லோன் பேசுகையில், இந்தியாமற்றும் பாகிஸ்தானுக்கிடையே பல வருடங்களாக தீர்வு காணப்படாமல் இருக்கிறது காஷ்மீர் பிரச்சனை. இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண பல முறைமுயன்றும் தோல்வியே கிடைத்துள்ளது.
இப்பிரச்சனையினால் நாம் இதுவரை 75,000 பேரை பலி கொடுத்து விட்டோம். இனிமேலும் பலி கொடுப்பது நாட்டின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல.தற்போது தெற்காசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.
இந்த சமயத்தில் இந்தியப் பிரதமர் வாஜ்பாய் துணிச்சலான முடிவு எடுக்க வேண்டும். காஷ்மீர் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வர அவர் அனைத்துவகையான முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.
தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதினுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா சம்மதம் தெரிவித்திருந்தது. அப்படி இருக்கும்போது, ஹூரியத் அமைப்பினருடன்பேச்சுவார்த்தை நடத்துவதில் தவறேதுமில்லை.
இதற்காக இந்தியா மற்றும் பாகிஸ்தானின் முக்கியத் தலைவர்கள், காஷ்மீர் பிரச்சனைக்கு அமைதியான முறையில் நிரந்தரத் தீர்வு காண வேண்டும். இருநாட்டின் தலைவர்களும் இப்பிரச்சனையில் தங்களது பிடிவாத போக்கைத் தளர்த்தி விட்டு பிரச்சனைக்குத் தீர்வு காண முயல வேண்டும்.
ஹூரியத் அமைப்பினர் யாரும் வன்முறையை விரும்பவில்லை. அமைதியான முறையில் இப்பிரச்சனைக்குத் தீர்வு காண விரும்புகிறோம் என்றார் அப்துல் கனிலோன்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications