கார்-லாரி மோதல்: தொழிலதிபரின் மனைவி சாவு
ஈரோடு:
ஈரோடு அருகே கார் மீது லாரி மோதியதில், கோவை தொழிலதிபரின் மனைவி இறந்தார்.
கோவையிலிருந்து ஈரோட்டிற்கு தொழிலதிபர் சிரியன் தாமஸ் தனது குடும்பத்துடன் காரில் பயணம் செய்தார். ஈரோட்டில் ஒருநிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் தாமஸ், அவரது மனைவி லிவியன் தாமஸ், குழந்தை ஜோனி ஆகியோர் காரில் வந்துகொண்டிருந்தனர்.
பெருந்துறை அருகே வந்தபோது கார் மீது வேகமாக வந்த லாரி மோதியது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த மூன்றுபேரும் பலத்த காயடைந்தனர். மூவரும் திருப்பூரில் ஒரு மருத்துவமனையில்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி லிவியன் தாமஸ் இறந்து போனார்.
காயமடைந்த சிரியன் தாமஸ் மற்றும், குழந்தை ஜோனி ஆகியோர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தசம்பவம் குறித்து தாரமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.