For Daily Alerts
Just In
பின்னோக்கி வந்த பஸ் மோதி கண்டக்டர் சாவு
ஊட்டி:
பின்னோக்கி வந்த அரசு பஸ் மோதியதில், பஸ் கண்டக்டர் இறந்தார்.
ஊட்டியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகக் கிளையில் பணியாற்றி வந்தவர் போஜன் (52). இவர் அக்டோபர் 8ம் தேதிபணிக்காக டிப்போவிற்குச் சென்றார். அங்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு ஒரு பஸ் டிரைவர், டிப்போவிலிருந்து பஸ்சை வெளியே எடுக்க பின்னோக்கி வந்தார். இதனைக் கவனிக்காமல்சென்று கொண்டிருந்த போஜன் மீது பஸ் மோதியது. இதில் போஜன் படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து, அரசு மருத்துவமனையில் போஜன் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார்வழக்குப் தபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Comments
Story first published: Monday, October 9, 2000, 5:30 [IST]