செவ்வாய் காலை 9.30க்கு ஆபரேஷன்
மும்பை:
பிரதமர் வாஜ்பாய்க்கு செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு அறுவைச் சிகிச்சைநடைபெறும் என அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யவுள்ள டாக்டர் ரனவத்தெரிவித்துள்ளார்.
மும்பை பிரீச்கன்டி மருத்துவமனையில் மூட்டு வலி அறுவைச் சிகிச்சைக்காக பிரதமர்வாஜ்பாய் அனுமதிக்கப்பட்டுள்ளார். அறுவைச் சிகிச்சைக்காக அமெரிக்காவிலிருந்துஞாயிற்றுக்கிழமை இரவு மும்பை வந்தார் ரனவத்.
திங்கள்கிழமை அறுவைச் சிகிச்சை குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,பிரதமர் நல்ல உடல் நலத்துடன் உள்ளார். அறுவைச் சிகிச்சையின்போது எந்தப்பிரச்சினையும் வராது என்று நினைக்கிறேன்.
மூட்டு வலிக்கான அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு 95 சதவீத நோயாளிகள் நல்லநலத்துடன் 10 ஆண்டுகள் வரை பிரச்சினையின்றி இருக்கிறார்கள். 80 சதவீதம் பேர் 20வருடம் வரைகூட பிரச்சினையில்லாமல் உள்ளார்கள். 5 சதவீதத்தினர் மட்டுமேபிரச்சினைகளைச் சந்திக்கின்றனர் என்றார்.
அறுவைச் சிகிச்சை குறித்து செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்குசெய்தியாளர்களிடம் விவரிப்பார் ரனவத்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications