For Daily Alerts
Just In
மதுரையில் அடை மழை
மதுரை:
மதுரையில் சனிக்கிழமை அடை மழை பெய்தது. இதனால் சிம்மக்கல், கோரிப்பாளையம், தெற்குவாசல், பெரியார் பஸ் நிலையம் உள்பட நகரின் பல்வேறுஇடங்களில் வெள்ளம் ஆறு போல் ஓடுகிறது.
மதுரையில் கடந்த ஒரு வாரமாக லேசான தூறலுடன் அவ்வப்போது மழை பெய்து வந்தது. இதற்கிடையே சனிக்கிழமை காலை முதல் அடைமழைபெய்யத் தொடங்கியது. நகரில் எங்கு பார்த்தாலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப்பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் கடும் மழை பெய்து வருவதால் பெரியார் அணையில் நீரின் அளவு 131.40 அடி உயரத்தை எட்டியுள்ளது.இதே போல் வைகை அணையிலும் நீரின் அளவு 65.4 அடி உயரத்தை எட்டியுள்ளது.
Story first published: Monday, October 9, 2000, 5:30 [IST]