பிரம்மோற்சவ "ஸ்பெஷல் மொட்டை 2. 5 லட்சம்
திருப்பதி:
திருப்பதியில் 9 நாட்கள் நடந்த பிரம்மோற்சவ திருவிழாவில் மட்டும் இரண்டரைலட்சம் பேர் மொட்டை போட்டுள்ளனர்.
திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா கடந்த மாதம் 30-ம்தேதி தொடங்கி ஞாயிற்றுக் கிழமையுடன் முடிவடைந்தது.
9 நாட்கள் நடந்த இத்திருவிழாவில் மொத்தம் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டுசுவாமி தரிசனம் செய்தனர். இவர்களில் இரண்டரை லட்சம் பேர் மொட்டைபோட்டனர்.
இந்த 9 நாள் திருவிழாவில் மட்டும் கோவிலுக்கு உண்டியல் மூலம் 3 கோடியே 80லட்ச ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது. இது தவிர தங்க, வெள்ளி நகைகள் தனி.
திருப்பதி லட்டு விற்பனை மூலம் ஒரு கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.இரண்டரை லட்சம் பேர் மொட்டை போட்டதன் மூலம் கணிசமான தொகைவருமானமாக கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு பிரம்மோற்சவத்தின் போது கிடைத்த வருவாயை விட இவ்வாண்டுஅதிக அளவில் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டில் உண்டியல் வசூல் ஒரு கோடி ரூபாய்மட்டுமே என்றார் திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி கிருஷ்ணய்யா.












Click it and Unblock the Notifications