For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சம்பள உயர்வு பிரச்சனை: விஸ்கோஸ் நிறுவன தொழிலாளர்கள் போராட்டம்

By Staff
Google Oneindia Tamil News

சிறுமுகை:

சம்பள உயர்வு குறித்து நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து விஸ்கோஸ் தொழிற்சாலையின் தொழிலாளர்கள்பாாேராட்டத்தில் இறங்குகின்றனர்.

கோவை மாவட்டம், சிறுகையில் தென்னிந்திய விஸ்கோஸ் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் 3,000தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இத் தொழிற்சாலை வெளியேற்றி வந்த கழிவுப்பொருட்களால் பவானி ஆறு மாசு பட்டு வந்தது.

இதையடுத்து இத் தொழிற்சாலை, கழிவுப் பொருட்களை சுத்திகரித்து தான் வெளியேற்ற வேண்டும் எனவும், கடுமையான கழிவுப்பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் ஆலைப் பிரிவை மூட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து ஆலையின் அந்தப் பிரிவு மூடப்பட்டது. மேலும், தொழிற்சாலையின் பிற பிரிவுகளில் உருவாகும் கழிவைசுத்திகரிக்க ஒரு சுத்தகரிப்பு நிலையம் உருவாக்கப்பட்டது. இதற்கென பல கோடி ரூபாய் செலவிடப்பட்டது.

இதையடுத்து இந்தத் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பள உயர்வு, போனஸ் போன்றவை தடைபட்டன.எனவே கடந்த 97, 98, 99 ஆகிய ஆண்டுகளில் வழங்கப்படாத சம்பள உயர்வு குறித்த தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்துக்கும்இடையே பேச்சுவார்த்தை நடந்தது. கோவை தொழிலாளர் ஆணையத்தில் நடந்த இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

இதையடுத்து சென்னையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில், 97,98, 99 ம் ஆண்டுகளுக்கு தலா 200 ரூபாய் சம்பள உயர்வும்,2000ம் ஆண்டிற்கு ரூ. 400மும் லாபம் ஈட்டும் சமயத்தில் மாதம் ஒன்றிற்கு ரூ. 100 வீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. சம்பளஉயர்வு தொகை தவணை முறையில் வழங்கவும் பேச்சுவார்த்தை நடந்தது.

இதில் அறிவிக்கப்பட்ட முடிவுகளை தொழிலாளர்கள் ஏற்றுக் கொள்ளாத நிலையில் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. எனவே,தொழிலாளர்கள் போராட்டத்தில் குதிக்க முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக ஐ.என்.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஏ.டி.யு., ஜே.டி.எல்.எப்., எம்.எல்.எப். ஆகிய தொழிற்சங்கங்கள் போராட்டத்தில்ஈடுபட முடிவு செய்துள்ளன. ஆண்டுக்கு ரூ. 600 வீதம் முதல் 750 வரை சம்பள உயர்வு வழங்க வேண்டும். அனைத்து சம்பளஉயர்வையும் ஒரே தவணையில் வழங்க வேண்டும்.

தொழிற்சாலையின் குறிப்பிட்ட பகுதியில் ஒப்பந்த தொழிலாளர்களை பணி செய்ய அனுமதிக்கக் கூடாது எனவும் இந்தஅமைப்புகள் கோரி வருகின்றன.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம், உண்ணாவிரதம் ஆகியவை மேற்கொள்ளவும் இந்த அமைப்புகள் தீர்மனம்நிறைவேற்றியுள்ளன. இதைத் தொடர்ந்து அக்டோபர் 10ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கவுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X