2 பஸ்களில் மோதிக் கொண்டதில் 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலம் அருகே 2 அரசு பஸ்கள் மோதிக் கொண்டதில் இருவர் இறந்தனர்.
சேலத்திலிருந்து அரசு பஸ் ஒன்று ஈரோட்டிற்குச் சென்று கொண்டிருந்தது. அதேசமயம், ஈரோட்டிலிருந்து சேலத்திற்குமற்றொரு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த இரு பஸ்களும் தாழியூர் என்ற இடத்தில் மோதிக் கொண்டன.
இதில் ஒரு பஸ்சில் பயணம் செய்த சேலம் கல்லூரி மாணவி ரேணுகா (21) சம்பவ இடத்திலேயே இறந்தார்.மற்றொரு பள்ளி மாணவன் அபுநாத் (14) பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்குசிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications