For Daily Alerts
Just In
அதிமுக தொண்டர் தீக்குளிப்பு
சென்னை:
ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு கூறப்பட்டதை அடுத்து அ.தி.மு.க. தொண்டர்ஒருவர் தீக்குளித்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.திருச்சியை அடுத்த ஜீயபரம் பெட்டவாய்த்தலையை சேர்ந்தவர் ராஜா (32). கூலித்தொழிலாளி. இவர் அ.தி.மு.க .தீவிரத் தொண்டர்.
திங்கள் கிழமை டான்சி வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டத் தகவல் அறிந்ததும் ராஜா மிகுந்தவேதனை அடைந்தார். மண்ணெண்ணெய் டின்னுடன் பஸ் நிலையத்திற்கு வந்தார்.
ஜெயலலிதாவை வாழ்த்திக் கோஷமிட்டபடி உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்துக் கொண்டார். உடலில் தீப்பிடித்து எரியத் துவங்கிய பின்னர் போலீசார்வேகவேகமாக வந்து அவரை போலீஸார் காப்பாற்றினர்.
உடனடியாக மருத்துவமனையில் அவரைச் சேர்த்தனர். உடல் முழுவதும்தீக்காயங்களுடன் ராஜா உயிருக்கு போராடி வருகிறார்.
Comments
Story first published: Tuesday, October 10, 2000, 5:30 [IST]