நீதிமன்றத்தில் ஆஜராக ராமர் பிள்ளைக்கு உத்தரவு
சென்னை:
மூலிகை பெட்ரோல் மோசடி வழக்கில் வரும் 30-ம் தேதி ராமர் பிள்ளை நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்திரவிட்டார்.
மூலிகை பெட்ரோல் டாவு விட்ட ராமர் பிள்ளை சி.பி.ஐயால் கைது செய்யப்பட்டார்.
சிறையில் அடைக்கப்பட்ட அவர் ஜாமீனில் விடுதலை ஆனார்.
இந்த வழக்குத் தொடர்பாக சி.பி.ஐ. புலன் விசாரணை நடத்தி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்தனர். ராமர் பிள்ளை உட்பட 5 பேர் மீது இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
சி.பி.ஐ போலீஸார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையை நீதிபதி பரிசீலனை செய்து விசாரணைக்கு ஏற்றுக்கொண்டார். இந்தகுற்றப்பத்திரிக்கை நகலை வருகின்ற 30-ம் தேதி பெற்றுக் கொள்ள ராமர் பிள்ளை உள்பட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகசம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.
நேற்று ராமர் பிள்ளை நீதிமன்றத்தில் ஆஜரானார்.
பத்திரிக்கையில் செய்தியைப்பார்த்ததும் நீதிமன்றத்தில் ஆஜரானேன் என்று நீதிபதியிடம் கூறினார் ராமர்பிள்ளை. வரும் 30-ம்தேதி மறுபடியும் நீதிமன்றத்தில் ஆஜராகுங்கள். அதற்கு சம்மன் அனுப்புகிறேன் என்று கூறினார் நீதிபதி.












Click it and Unblock the Notifications