For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

இலங்கை நாடாளுமன்றத்திற்கு செவ்வாய்கிழமை நடக்கும் தேர்தலில் விறுவிறுப்பானவாக்குப் பதிவு நடந்துவருகிறது.

மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று வாக்களித்து வருகிறார்கள். வன்முறை நடக்கலாம்என்ற அச்சத்திற்கிடையேயும் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் காலை முதலே வாக்குச்சாவடிகளில் ஓட்டுப் போட்ட் வருகிறார்கள்.

காலையில் வாக்களித்துவிட்டு வந்த வாக்காளர்கள், வெளிநாட்டு பார்வையாளர்கள்முன்னிலையில் தேர்தல் மிகவும் அமைதியாக நடந்து வருவதாக தெரிவித்தனர்.

விடுதல்ை புலிகளின் ஆதிக்கம் அதிகம் உள்ள யாழ்ப்பாணம் உட்பட இலங்கையின் 22மாவட்டங்களில் 9,500 மையங்களில் வாக்குப்பதிவு நடந்து வருகிறதுஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தத் தேர்தலில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்நதெடுக்க 1.20 கோடிவாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்.

கடந்த 5 வாரங்களாக தேர்தல் தொடர்பாக நடந்த 1,726 வன்முறைச் சம்பவங்களில் 61பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இலங்கை நிலைமை குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், தற்போது அமைதிநிலவி வந்தாலும் மக்கள் வன்முறை சம்பவங்கள் நிகழக் கூடும் என்ற எண்ணத்தில்சற்று பதட்டமாகவே இருக்கிறனர் என தெரிவித்தார்.

இதற்கிடையே அதிபர் சந்திரிகாவின் தாயாரும் முன்னாள் பிரதமருமான ஸ்ரீமாவோபண்டாரநாயகே திடீரென மரணமடைந்ததால் இலங்கை சோகத்தில் ஆழ்ந்துள்ளது

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X