இந்திய அணு ஆயுத எதிர்ப்பாளர்களுக்கு பிரெஞ்சு விருது
பாரீஸ்:
இந்தியாவைச் சேர்ந்த அணு ஆயுத எதிர்ப்பு பிரசாரகர் மற்றும் பத்திரிகையாளர்இருவருக்கு சர்வதேச அமைதிக் கழகத்தின் (ஐ.பி.பி.) மாக்பிரைட் விருதுவழங்கப்படவுள்ளது.
பிரஃபுல் பித்வாய் மற்றும் அச்சின் வனைக் ஆகிய இருவரும் விருது பெறத்தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆவர். தெற்காசியாவில் நிலவி வரும் அணு ஆயுதப்பரவலை தடுக்கும் பிரச்சாரத்தில் இருவரும் முனைப்புடன் ஈடுபட்டு வந்தனர். இந்தசேவையைப் பாராட்டி மாக்பிரைட் பரிசை ஐபிபி வழங்குகிறது.
வெள்ளிப் பதக்கம் அடங்கியது இந்த விருது. விருது வழங்கும் விழா, அக்டோபர்மாதம் 12-ம தேதி முதல் 14-ம் தேதி வரை பாரீசுக்கு வடமேற்கே உள்ள நாந்டேரேஎன்ற இடத்தில் நடைபெற உள்ளது.
மூன்று வருடத்திற்கு ஒரு முறை உலக அமைதி என்ற பெயரில் இந்த விழாநடைபெறுகிறது.
பித்வாயும், வனைக்கும் சமீபத்தில் ஆசியாவின் அணு ஆயுதச் சூழ்நிலை குறித்து நியூ நியூக்ஸ்: இந்தியா, பாகிஸ்தான் அண்ட் குளோபல் டிஸ்ஆர்மமென்ட் என்றபெயரில் ஒரு புத்தகத்தை எழுதியிருந்தனர்.
தெற்காசிய நாடுகளில் இந்தப் புத்தகம் சவுத் ஆசியா ஆன் ஷார்ட் பியூஸ் என்றபெயரில் வெளியிடப்பட்டது. இருவரும் இணைந்து, டெஸ்டிங் டைம்ஸ்: திகுளோபல் ஸ்டேக் இன் எ நியூக்ளியர் டெஸட் பேன் என்ற புத்தகத்தையும்எழுதியுள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications