இந்திய புலனாய்வு ஏஜென்டுகள் என்று கூறி 7 பேர் பாக்.கில் கைது

Subscribe to Oneindia Tamil

கராச்சி:

இந்திய ஆராய்சி மற்றும் புலனாய்வுத் துறையை("ரா) சேர்நதவர்கள் என்று கூறி 7இந்தியர்களை பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. அதிகாரிகள் கைதுசெய்தனர்.

இதுகுறித்து பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் கூறுகையில், கைது செய்யப்பட்டவர்கள்தாங்கள் செய்த குற்றங்களை ஒப்புக் கொண்டனர் இவர்கள் கொலைகள், கடத்தல்கள்,ராக்கெட் லாஞ்சர் தாக்குதல்கள், குண்டு வெடிப்பு மற்றும் பல விதமான குற்றங்களைப்புரிந்துள்ளனர்.

இவர்களிடமிருந்து வெடிபொருட்கள், டெடனேட்டர், 12 ஏகே 47 ரக துப்பாக்கிகள்,ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் 1000-க்கும் மேற்பட்ட துப்பாக்கி குண்டுகளும்கைப்பற்றப்பட்டன.

இவர்கள் பாகிஸ்தானில் 1995-ம் ஆண்டு முதல் இயங்கி வருவதாக கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள், சஃபிக், ஹஷிம், சலே முகமது, ஹஜி டோங்கர், ஜுமான்,மராடோ மற்றும் கராச்சியைச் சேர்ந்த அப்துல் ஜபார் என அடையாளம்காணப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள், "ரா அமைப்பின் செயல்பாடுகளை, கராச்சி கடற்பகுதியில் உள்ள மீன் பிடிப்புப் பகுதியில் இருந்து மேற்கொண்டு வந்ததாகவும்,பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இவர்கள் கராச்சி, ஐதராபாத், முல்தான், ஒகாரா, லாகூர், சியால்கோட்,குஜ்ரன்வாலா மற்றும் ராவல்பிண்டி நகரங்களில் 36 தீவிரவாத நடவடிக்கைகளில்ஈடுபட்டுள்ளனர். 73 பேரைக் கொன்றுள்ளனர். 106 பேரை படுகாயப்படுத்தியுள்ளனர்எனவும் கூறியுள்ளனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+