வாஜ்பாய் அருகிலேயே அணு ஆயுத ரெட் பட்டன்
மும்பை:
மூட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டு மும்பை மருத்துவமனையில் தங்கியுள்ள பிரதமர் வாஜ்பாய் அங்கிருந்துகொண்டே இந்தியாவை இயக்கி வருகிறார்.
இதற்காக ஹாட் லைன்கள் அடங்கிய முழு தகவல் தொடர்பும் அவரது அறையிலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளது.இது தவிர நாட்டின் அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்தும் ரெட் பட்டன் அடங்கிய கட்டுப்பாட்டுக் கருவிகள்,கோட்கள் ஆகியவையும் மருத்துவனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
இது தவிர மகாராஷ்டிர மாநில அரசின் விருந்தினர் இல்லமும் பிரதமர் அலுவலகமாக மாற்றப்பட்டுள்ளது.இங்கிருந்து டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்துக்கு தனி ஹாட் லைன் அமைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் தான் அரசை இப்போதும் இயக்கி வருகிறார். வேறு யாரிடமும் அந்தப் பொறுப்பை அவர்கொடுக்கவில்லை என மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜன் கூறினார்.
அறுவை சிகிச்சை நடந்தபோது உள்துறை அமைச்சர் அத்வானி மருத்துவமனையில் இருந்தார். சிகிச்சை முடிந்தபின்சிறப்பு விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
அடுத்து சில தினங்களுக்கு அவர் மருத்துவனையில் தான் இருப்பார். முழு குணமடைய 5 முதல் 15 நாட்கள் வரைஆகும் என அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் சித்தரஞ்சன் ரணவத் கூறினார்.