தெ. ஆப்பிரிக்க முன்னாள் வீரர் சிம்காக்ஸின் மகன் மீது இனவெறிப் புகார்
டர்பன்:
இந்திய வம்சாவளி தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரரைப் பார்த்து இன ரீதியாகவிமர்சித்ததாக, தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பாட்சிம்காக்ஸின் மகன் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக குவாசலு நேட்டால் உயர் நிலைப் பள்ளிகள் மற்றும் இளைஞர்கிரிக்கெட் யூனியன் விசாரணை மேற்கொண்டது. இதுகுறித்து யூனியன் சார்பில்வெளியிடப்பட்ட அறிக்கையில், விரிவான விசாரணை நடந்தது. தவறு செய்தவர்கள்மன்னிப்பு கேட்டுக் கொண்டனர். அது ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
சிம்காக்ஸின் மகன் ருஸ்ஸல் சிம்காக்ஸ், புகழ் பெற்ற ஹில்டன் கல்லூரியில் படித்துவருகிறார். இவர், வருலாம் உயர் நிலைப் பள்ளியில் படித்து வரும் இந்திய இனத்தைச்சேர்ந்தவரான உகேசன் கோவேந்தர் என்ற மாணவரைப் பார்த்து இன ரீதியாக கருத்துக்கூறியதாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
கடந்த வாரம் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியின்போது இந்தசம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்தப் புகாரை பாட் சிம்காக்ஸ் மறுத்திருந்தார். தனது மகன் மீது எந்தத் தவறும்இல்லை என்று அவர் தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.