மெளனத்தை கலைத்தது திமுக
சென்னை:
ஜெயலலிதா மீதான வழக்கில் சட்டம் தன் கடமையைச் செய்துள்ளது என்று திமுக கூறியுள்ளது.
டான்சி வழக்கில் ஜெயலலிதா தேர்தலில் நிற்க முடியாத அளவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறித்து பல்வேறுகட்சிகளும் கருத்து தெரிவித்து வரும் சூழ்நிலையில், ஆளும் திமுக சார்பிலோ, தமிழக அரசு சார்பிலோ எந்தக் கருத்தும்தெரிவிக்காமல் மவுனம் காக்கப்பட்டது.
செவ்வாய்கிழமை மாலை அந்த மவுனத்தை தமிழக அரசு கலைத்தது. தமிழக சட்ட அமைச்சர் ஆலடி அருணா தீர்ப்பு குறித்துகருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், டான்சி வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளதன் மூலம் சட்டம் தன் கடமையைச்செய்துள்ளது. ஜெயலலிதா மீது போடப்பட்டுள்ள வழக்குகள் பழிவாங்கும் நடவடிக்கை என்று அதிமுகவினர் கூறி வந்தனர்.
இதில் பழிவாங்கும் எண்ணம் இல்லை; ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டின் அடிப்படையில் தான் வழக்கு தொடரப்பட்டதுஎன்பதை இந்த தீர்ப்பு நரூபித்துள்ளது.
வழக்குகளை இழுத்தடிக்கும் விதமாக அவர்கள் ஏதேதோ செய்தும் சரியான, நியாயமான தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. இதன்காரணமாக மக்கள் பிரதிநதித்துவச் சட்டப்படி ஜெயலலிதா ஆறாண்டுகள் தேர்தலில் நிற்க இயலாது என்றார் அமைச்சர் அருணா.












Click it and Unblock the Notifications