"நெடுமாறனை காட்டுக்கு அனுப்பியவர் சோனியா காந்தி
சென்னை:
நெடுமாறனை காட்டுக்கு அனுப்பக் காரணம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திதான்என்று தமிழக ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், சோனியா காந்தி கூறியதால்தான் பழ.நெடுமாறனை, வீரப்பனின் தூதராக அனுப்ப கர்நாடக முதல்வர் கிருஷ்ணா ஒத்துக்கொண்டார்.
நெடுமாறன் விடுதலைப்புலிகளின் பகிரங்க அனுதாபி என்று தெரிந்தும் கூட அவரைத்தேர்ந்தெடுத்தது ஏன் என்பதை சோனியா காந்தி விளக்க வேண்டும்.
விடுதலைப் புலிகள் விவகாரத்தில் என பரிவு காட்டுவது ஏன்.?
விடுதலைப் புலிகளுக்கும், இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளைத் தூண்டிவிடும் பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐக்கும் தொடர்பு உள்ளது.
ஒரு வாரத்திற்கு முன்புதான் 2001-ம் ஆண்டு மக்கள் தொகைக்கணக்கெடுப்பின்போது, இந்தியாவில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களதுகுடியுரிமையை இந்தியர்கள் என்பதற்குப் பதில் தமிழர் என்றே கூற வேண்டும் எனநெடுமாறன் கூறியிருந்தார் என்று சுவாமி கூறியிருந்தார்.
கர்நாடகத்தில் எஸ்.எம்.கிருஷ்ணா தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியில்இருப்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications