சுப்ரீம் கோர்ட் அருகே குண்டு வெடிப்பு: 3 பேர் காயம்
டெல்லி:
டெல்லியில் சுப்ரீம் கோர்ட் வளாகம் அருகே செவ்வாய்க்கிழமை காலை குண்டுவெடித்ததில், மூன்று பேர் காயமடைந்தனர்.
காலை 11.50 மணிக்கு சுப்ரீம்கோர்ட் அருகே உள்ள பகவான் தாஸ் சாலையில் இந்தவெடிகுண்டு வெடித்தது. வெடிகுண்டு வெடித்ததில் பாதுகாவலர்கள் உள்பட 3 பேர்காயமடைந்தனர்.
குண்டு வெடித்த தகவல் அறிந்தவுடன் தீயணைப்புப் படையினர் சுப்ரீம் கோர்ட்விரைந்தனர். மூன்று தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன. மூன்றுஆம்புலன்ஸ்களும் வரவழைக்கப்பட்டன. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது.
காயமடைந்தவர்கள் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையைச் சேர்ந்த தலைமைக்காவலர் கான்ஹா ராம், சந்தோஷ் (22) என அடையாளம் தெரிய வந்துள்ளது. ஒருவர்யார் என்று தெரியவில்லை. கான்ஹா ராமுக்கு காலில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.சந்தோஷுக்குக் கையில் காயம் ஏற்பட்டது.
குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குவிரைந்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications