புதிய தூதர்களுக்கு வெற்றி கிடைக்குமா?
சென்னை:
வீரப்பன் பிடியிலிருந்து, நடிகர் ராஜ்குமாரை மீட்டு வர அரசுத் தூதர் கோபாலுடன், மேலும் 3 தூதர்கள் காட்டுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
அவர்களில் முக்கியமானவர் பழ. நெடுமாறன். கோபாலுடன் சென்றுள்ள இந்தப் புதிய தூதர்களுக்கு வெற்றி கிடைக்குமா என்பது இன்னும் ஓரிருதினங்களில் தெரிய வரும்.
புதிதாக சென்றுள்ள மூவர் குறித்த தகவல்கள்.
பழ.நெடுமாறன்: காங்கிரஸ் இயக்கத்தின் தீவிர பற்றுக் கொண்டவரான இவர் மதுரையைச் சேர்ந்தவர். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்திபடுகொலைச் சம்பவத்தில், தொடர்புடைய விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக நிதி திரட்டியவர். தற்போதும் புலிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துவருகிறார்.
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி ஒருமுறை மதுரையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அவர் மீது பெரும் தாக்குதல் நடந்தது. அப்போது தன்தலையைக் கொடுத்து இந்திராவின் உயிரைக் காப்பாற்றியவர் இவர்.
பின்னாளில், மூப்பனாருக்கும், இவருக்கும் அரசியல்ரீதியாகப் பிரச்சனைகள் வரவே காங்கிரசிலிருந்து பிரிந்து தமிழர் பாதுகாப்பு இயக்கங்களுடன் தன்னைஇணைத்துக் கொண்டார்.
இலங்கைத் தமிழர்களின் நலனுக்காகத் தொடர்ந்து பாடுபட்டு வருபவர்.
பேராசிரியர் கல்யாணி:
திருநெல்வேலி மாவட்டம் சவுந்தரபாண்டியபுரத்தைச் சேர்ந்த இவர் மக்கள் சிவில் உரிமைக் கழகம் என்ற தனியார் தொண்டு நிறுவனத்தை நடத்திவருகிறார். முதலில் திண்டிவனம் அரசுக் கலைக்கல்லூரியில் பணிபுரிந்து வந்தார்.
பொதுச்சேவைக்காகத் திருமணம் செய்து கொள்ளாத இவர், மனித உரிமை இயக்கத்திற்காக தனது அரசு வேலையை ராஜினாமா செய்தவர்.
விழுப்புரம் பகுதியில் வாழும் பழங்குடியினர் மீது போலீஸார் அடக்குமுறையைக் கையாள்வதாக பல போரட்டங்கள் நடத்தி வருகிறார் இவர். இவர் மீது பலவழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சுகுமாறன்:
சுகுமாறன் பாண்டிச்சேரியைச் சேர்ந்தவர். புதுச்சேரி மக்கள் சிவில் உரிமைக் கழக செயலாளராக இருக்கிறார்.
கொடைக்கானல் டிவி டவர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் இவருக்குத் தொடர்பிருக்கலாம் என்று கைது செய்யப்பட்டவர். இச்சம்பவத்தில் மாறனுக்கும்தொடர்புள்ளது குறிப்பிடத்தக்கது.
போலீஸ் அத்துமீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் போராடி வரும் இவர் மீதும் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.