ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளம்
தர்மபுரி:
மேட்டூர் அணை நிரம்பி உள்ளதாலும், காவிரியில் வெள்ளம் கரைபுரண்டுஓடுவதாலும் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகள் மூழ்கி விட்டன.
காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டத்தால் மேட்டூர் அணை நிரம்பி விட்டது. இதனால்காவிரி ஆற்றுக்கு கூடுதல் தண்ணீர் மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்படுகிறது.கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை நிரம்பியதால் அணை தண்ணீர் ஒகேனக்கல் வரை பரவி கடல் போல்காட்சியளிக்கிறது. வழக்கமாக பாறைகள் மூலம் தண்ணீர் அருவியாகக் கொட்டும்.அந்த பாறைகள் அனைத்தும் நீரில் மூழ்கி விட்டன. அதனால் அங்கு அருவியில்குளிப்பதற்கும், பரிசலில் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அருவியில் குளிகக வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துசெல்கின்றனர். ஆனாலும் தண்ணீர் நிரம்பி கடல் போல் இருப்பதைக் காண மக்கள்வருகிறார்கள். அங்கு பலத்த போலீஸ் காவலும் போடப்பட்டுள்ளது.