ஜெ. இன்னும் திருந்தவில்லை .. ஆர்க்காடு வீராச்சாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

உண்மையை மறைப்பதற்காக தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா, மூளை குழம்பி அறிக்கைகள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார் என்று அமைச்சர்ஆற்காடு வீராச்சாமி விமர்சித்துள்ளார்.

டான்சி நிலப் பேரல் ஊழல் வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு 3 வருடக் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. இதை எதிர்த்துஅதிமுக தொண்டர்கள் சாலை மறியல், பஸ்சுக்குத் தீ வைப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டனர். இவர்களை விடுதலை செய்யும்படிஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதற்குப் பதிலடி கொடுத்து அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி வெளியிட்ட அறிக்கை:

கடந்த கால நிகழ்ச்சிகளை மறந்து விட்டு அறிக்கைகள் வெளியிடுவது ஜெயலலிதாவுக்கு வாடிக்கையான விஷயம். 3 ஆண்டுகள் சிறைத் தண்டனைகிடைத்தவுடன் வன்முறையில் ஈடுபட்ட தொண்டர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மூளைக் குழப்பத்தில் அவசர, அவசரமாக அறிக்கைகள் வெளியிட்டுள்ளார்ஜெயலலிதா. பஸ்களைக் கொளுத்தியவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ள ஜெயலலிதா, மதுரையில் பஸ்கள் எரிக்கப்பட்டசம்பவத்திற்கு யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அபாண்டமாகக் தனது அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரை வன்முறைச் சம்பவத்தில் 8 திமுக வினர் கைது செய்யப்பட்டு, அவர்கள் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.மேலும் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் ஜெயலலிதாவோ, இதையெல்லாம் மீறி, மதுரை சம்பவத்தில் தொடர்புடைய யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றுகுற்றம்சாட்டியுள்ளார். இப்படி உண்மைகளை மறைத்து, மறைத்து அதற்கான பரிசைப் பெற்றுள்ள ஜெயலலிதா இன்னமும் தன்னைத் திருத்திக் கொள்ளவில்லைஎன்பதுதான் உண்மை என்ற தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் ஆற்காடு வீராச்சாமி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+