எம்.பிக்கு நரசிம்மராவ் கொடுத்த லஞ்சப் பணத்தை பறிமுதல் செய்ய உத்தரவு
டெல்லி:
ரூ. 50 லட்சம் பணத்தை நரசிம்மராவிடம் இருந்து வாங்கிக் கொண்டு அவருக்கு ஆதரவாக வாக்களித்தஎம்.பியிடமிருந்து அந்தப் பணத்தை அதை உடனே பறிமுதல் செய்யுமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
தனது ஆட்சிக்கு பிரச்சனை வந்தபோதெல்லாம் பணம் கொடுத்து எம்.பிக்களை வாங்கிய ஜகஜாலப் பிரதமர்நரசிம்மராவ். ஒரு கட்டத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியையே காசு கொடுத்து உடைத்து தனக்குஆதரவாக எம்.பிக்களை இழுத்தார்.
ராவ் ஆட்சியை விட்டு இறங்கிய உடனேயே இது தொடர்பான வழக்கு துரிதமடைந்தது.
இந்த வழக்கில் ராவ் கொடுத்த பணத்தை வாங்கிய ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி. சைலேந்திர மாகாதேப்அப்ரூவராக மாறிவிட்டதையடுத்து நரசிம்ம ராவ் இப்போது ஜெயிலுக்கு செல்லும் நிலைக்குத்தள்ளப்பட்டிருக்கிறார்.
ராவ் கொடுத்த பணத்தை மகாதேப் 3 வங்கிகளில் போட்டு வைத்துள்ளார். இந்தப் பணத்தை உடனைகைப்பற்றுமாறு அரசுக்கு இப்போது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications