பண்டாரநாயகா உடல் சனிக்கிழமை அடக்கம்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

செவ்வாய்க்கிழமை மரணமடைந்த இலங்கை முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயகாவின் (84) உடல்சனிக்கிழமை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது.

தேர்தலில் வாக்களித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பும் வழியில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

இவரது மரணத்தையொட்டி 3 நாட்கள் அரசுமுறை துக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாட்டின் கொடிஅரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.

கொழுபுவிலிருந்து 30 கி.மீ. தொலைவில் ஹோரோகொல்லாவில் உள்ள பண்டாரநாயகாவின் சொந்த வீட்டின்தோட்டத்த்தில் இவரது உடல் அடக்கம் செய்யப்படும். கணவர் சோலோமண் உடல் புதைக்கப்பட்ட இடத்துக்குஅருகிலேயே தனது உடலையும் புதைக்க வேண்டும் என ஸ்ரீமாவோ உயிலில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எனது உடலை எரிக்க வேண்டாம், கணவர் சமாதியின் அருகிலேயே புதைத்துவிடுங்கள். நான் இறந்த பின்உடலை காலதாமதம் செய்யாமல் புதைக்க வேண்டும். எனது உடலுக்கு அஞ்சலி செலுத்த மலர்கள் வாங்கவேண்டாம். அந்தப் பணத்தை கண்டியில் கட்டப்பட்டு வரும் குழந்தைகள் மருத்துவனைக்கு வழங்குங்கள். அந்தமருத்துவனை விரைவிலேயே கட்டி முடிக்கப்பட வேண்டும் எனவும் பண்டாரநாயகா தனது உயிலில் கடைசிஆசையாகக் குறிப்பிட்டுள்ளார்.

வியாழக்கிழமை வரை பண்டாரநாயகாவின் உடல் அவரது ரோஸ்மியெட் மாளிகையில் வைக்கப்பட்டிக்கும்.பின்னர் நாடாளுமன்றத்தில் வைக்கப்படும். அங்கிருந்து சனிக்கிழமை ஹோரோகொல்லா எடுத்துச் செல்லப்பட்டுஅன்றைய தினமே புதைக்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+