For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜ்குமாருக்கு பாதுகாப்பு தராதது ஏன்?: தமிழக, கர்நாடக அரசுகளுக்கு நீதிமன்றம் கண்டனம்

By Staff
Google Oneindia Tamil News

டல்லி:ராஜ்குமாரை வீரப்பன் கடத்தத் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்தும் அவருக்கு பாதுகாப்புத் தர தவறியதுஏன் என தமிழக, கர்நாடக அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

வீரப்பன் விடுவிக்கக் கோரும் தடா கைதிகளை விடுவிப்பது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில்புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணை 4 மணி நேரம் நீடித்தது. நீதிமன்ற அறையே நிரம்பிவழிந்தது. மிகுந்த பரபரப்புடன் காணப்பட்ட இந்த வழக்கில் 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் பல கேள்விகளைஎழுப்பினர்.

நீதிபதிகள் கூறுகையில், இரு மாநில அரசுகளும் நிறைய பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. ராஜ்குமாரைகடத்தலாம் என்று தெரிந்தும் இரு அரசுகளும் சும்மா இருந்திருக்கின்றன.

குறிப்பாக கர்நாடக அரசு உண்மையை மறைக்கப் பார்க்கிறது. ராஜ்குமார் விடுவிக்கப்படாவிட்டால் சட்டம்-ஒழங்குபிரச்சனை வரும் என்று சொல்கிறது கர்நாடக அரசு. இது உண்மையல்ல. வீரப்பனின் உண்மையானகோரிக்கைகளை மறைப்பதற்காக கர்நாடகம் இப்படிக் கூறி வருகிறது.

இந்த சினிமா நடிகருக்கு ஏதாவது நடந்தால் தமிழகத்திலும், கர்நாடகத்திலும் வன்முறை வெடிக்கும் என்று கூறுவதுஎந்த அளவுக்கு உண்மை என்பதை கர்நாடக அரசு விளக்க வேண்டும்.

அதே போல வீரப்பனை பிடிக்க கடந்த 10 ஆண்டுகளில் கர்நாடக அரசு என்னென்ன நடவடிக்கைகளைமேற்கொண்டது என்ற முழு விவரத்தையும் நீதிமன்றத்துக்குத் தெரிவிக்க வேண்டும்.

வீரப்பனைப் பிடிக்க சிறப்புப் படை அமைத்தும் அவனைப் பிடிக்க முடியவில்லை என்றால் என்ன தான் செய்தனஅந்தப் படையும், அரசும்?

இவ்வாறு நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினர்.

அப்போது கர்நாடக அரசின் வழக்கறிஞர் எழுந்து சில முக்கியமான கோப்புகளை நீதிமன்த்திடம் வழங்கத்தயாராக இருப்பதாகக் கூறினார். அதை திங்கள்கிழமை சமர்பிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X