அதிமுக சார்பில் 52 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
சென்னை:
அதிமுகவின் 29வது ஆண்டு விழா சென்னையில் 17ம் தேதி நடைபெறுகிறது. அதையொட்டி 52 ஜோடிகளுக்கு இலவச திருமணம்செய்து வைக்கிறார் ஜெயலலிதா.
இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்ட அறிக்கை:
நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கைதாகி வருகின்றனர். இதனால் திட்டமிட்டபடி அதிமுகநிகழ்ச்சிகளும், பணிகளும் நடைபெற இயலாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
கட்சிப் பணிகள் தொய்வின்றி நடைபெறும் வகையில் இனிமேல் யாரும் போராட்டம் நடத்தி கைதாக வேண்டாம்.
அதிமுகவை தொடங்கி 28 ஆண்டுகள் நிறைவடைந்து வரும் 17ம் தேதி செவ்வாய்கிழமையன்று 29வது ஆண்டுதொடங்குவதைக் கொண்டாடும் வகையில், அன்று காலை 10.30 மணியளவில் சென்னையில் தலைமைக் கழகத்தில் உள்ளஎம்ஜிஆர் சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவிக்கிறார்.
கொடி ஏற்றி வைத்து 29வது ஆண்டு விழாவை தொடங்கி வைக்கிறார். பின்னர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக படுகொலைசெய்யப்பட்ட அதிமுகவினர் குடும்பத்திற்கு நிதியுதவிகள் வழங்குகிறார்.
தென்மாவட்ட சுற்றுப் பயணத்தின்போது கோவில்பட்டியில் ஜெயலலிதா தலைமையில் நடைபெறுவதாக இருந்த 52ஜோடிகளுக்கான திருமணங்களையும் 17ம் தேதி அவர் நடத்தி வைக்கிறார்.
இவ்வாறு அதிமுக தலைமை நிலையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications