டயானா வருவதைத் தடுத்தாரா அன்னை தெரசா?
லண்டன்:
இங்கிலாந்து இளவரசி டயானா, 1995 ம் ஆண்டு இந்தியாவிற்கு வந்து அன்னை தெரசாவை சந்திக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார். ஆனால்அவரது வருகையை தெரசா விரும்பவில்லை என்று இங்கிலாந்தில் வெளியாகியுள்ள புத்தகம் ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
1988 முதல் 1996 வரை டயானாவின் உதவியாளராக இருந்தவர் பேட்ரிக் ஜெப்சன். இவர் இளவரசி டயானா குறித்து ஷாடோஸ் ஆப் பிரின்ஸஸ் என்றபுத்தகத்தை எழுதியுள்ளார்.
புத்தகத்தில் டயானாவுக்கும், கணவர் இளவரசர் சார்லஸுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், அதனால் எழுந்த பிரச்சினைகள் குறித்துஎழுதப்பட்டுள்ளது. புத்தகத்திலிருந்து சில பகுதிகள்:
இளவரசர் சார்லசும், டயானாவுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதில் இருவரும் விவாகரத்துப் பெற வேண்டும் என்று முடிவு செய்திருந்தனர்.தனக்குக் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டு சார்லஸை மட்டம் தட்டினார் டயானா.
விவாகரத்துப் பெறுவதற்கு ஒரு வருடத்திற்கு முன் டயானா என்னிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, உடனடியாக கல்கத்தாசென்று அன்னை தெரசாவைப் பார்க்க வேண்டும் அதன் மூலம் தனக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்றார்.
டயானாவின் விருப்பப்படி நான், அன்னை தெரசாவின் உதவியாளரான அமெரிக்க கன்னியாஸ்திரி ஒருவரிடம் தெரிவித்தேன். அதற்கு அவர், டயானா, அன்னைதெரசாவைச் சந்திப்பதற்காக இந்தியாவிற்கு வர வேண்டிய அவசியமில்லை. நாங்கள், லண்டனில் போதைப் பொருட்களை ஒழிக்கும் இரண்டு மையங்களைஅமைத்துள்ளோம். டயானா சேவை புரிய வேண்டும் என்று விரும்பினால், இந்த மையங்களுக்குச் செல்லலாம். அவர் அந்த மையங்களுக்கு அடிக்கடிசென்று சமூக சேவை செய்யவும் வசதியாக இருக்கும் என்று தெரசா விரும்புவதாக கூறினார்.
இதையடுத்து டயானாவின் கல்கத்தா பயணம் ரத்து செய்யப்பட்டது. டயானாவின் வருகையை ஒருவேளை தெரசா விரும்பாமல் இருந்திருக்கலாம் என்றுபுத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் புத்தகத்திற்கு டயானாவின் மகன் இளவரசர் வில்லியம் மற்றும் அரச குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டயானாவின் விசுவாசிகள்எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இறந்த ஒருவர் குறித்து இதுபோன்ற செய்திகளை வெளியிடுவது அநாகரீகம் என்று டயானாவின் நண்பர்கள் கூறியுள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications