குளித்தலையில் ரூ. 1 கோடி மதிப்பு அபின் பறிமுதல்
திருச்சி:
குளித்தலையில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
குளித்தலையை அடுத்த மேல குட்டப்பட்டியைச் சேர்ந்தவர் வைரமணி (32). இவர் குளித்தலை முசிறி காவிரி ஆற்றுப் பாலத்தில்சுங்கம் வசூலிக்க ஏலம் எடுத்து வசூல் செய்து வருகிறார்.
இவர் கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் கலலூரி மாணவர்களிடையே போதைப் பொருள் விற்று லட்சக்கணக்கில் பணம்சம்பாதித்து வந்துள்ளார். இவருக்கு ஆறுமுகப்பெருமாள் என்ற நபர் உதவி வந்தார்.
இந்த தகவல் போலீசாருக்கு தெரிந்ததும் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரன், வட இந்திய மார்வாடிபோல் வேடமிட்டு வைரமணியை சந்தித்தார். போதைப் பொருள் சப்ளை பற்றி வியாபாரம் பேசினார்.
அவரை நம்பி ஒரு கிலோ எடையுள்ள அபின் பாக்கெட்டை எடுத்துக் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த போலீசார் சுற்றிவளைத்து வைரமணியை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்களை போலீசார் கைப்பற்றினர்.












Click it and Unblock the Notifications